Friday, May 29, 2009

மீனே மீனே மீனம்மா!

வெள்ளி மீன்கள். வெளிச்சம் கொடுக்க முடியலை. என்றாலும் ஒரு மாதிரியா, ஒரு மாதிரியாத் தான், கவனிக்க, எடுத்தாச்சு. :D
மீனே மீனே மீனம்மா, விழியைத் தொட்டது யாரம்மா, தானே வந்து தழுவிக் கொண்டு சங்கதி சொன்னது யாரம்மா?

Tuesday, May 26, 2009

மல்லிகைப் பூவா? இட்லியா???? பொன்வண்டின் சந்தேகம்!

மெளலி வந்தப்போ இட்லி கொடுத்தால் சாப்பிடலை. அதைத் தோட்டத்தில் மாமரத்தடியில் உள்ள கல்லில் வைக்கச் சொன்னேன். மறுநாள் பார்த்தால் ஒரு பொன்வண்டு அதைப் பூவோனு நினைச்சு தேன் கிடைக்குமானு பார்த்துட்டு இருந்தது. உடனே ஒரு க்ளிக் எடுக்கணும்னு நினைச்சால் கிட்டே போகமுடியலை. ஓடிப் போயிடுது. வேறே வழியில்லைனு தள்ளி இருந்து ஜூம் பண்ணினால் பொன்வண்டைத் தவிர மத்தது வருது. என்னத்தைச் செய்ய? உற்றுப் பாருங்கள். குப்பைத் தொட்டிக்கு அருகே ஒரு கல்லில் இரண்டு இட்லியும், கொஞ்சம் கறுப்புக் கலந்த நிறத்தோடு ஒரு பூச்சியும் தெரியும். வேறே வழி இல்லை. கிட்டேப் போனால் பறந்து போயிடுது.

Monday, May 25, 2009

சுகமான தூக்கம்!

எங்க வீட்டுச் செல்லம் நாரத்தை மர நிழலில் தூங்கும்போது எடுத்த படம் இது. எப்படியோ படம் எடுக்கிறோம்னு தெரிஞ்சுட்டுப் போய் மறைஞ்சு கொண்டு விட்டது. கிட்டக்கப் போய் ஜூம் பண்ணி எடுக்கலாம்னா ஓடிப் போயிடறது. என்ன செய்ய?????? சரியா வரலை, ஆனால் அதை யார் விட்டாங்க? அடுத்து ஒண்ணு எடுக்கலாம்.

Wednesday, May 13, 2009

வானரங்கள் கனி கொடுத்துக் கொஞ்சும்!

2007-ல் டிசம்பரில் அழகர் கோயில் போனப்போ அங்கே எடுத்தது இந்தப் படம். வானரக் கூட்டமே இருந்தது. எல்லாம் ஓடிப் போக இருந்தவை மட்டுமே கொடுத்த போஸ் இது!கீழே பாதையில் ஒரு வானரம் வந்து தைரியமாய் உட்கார்ந்து கொண்டு சாலையைக் கடக்க நேரம் பார்த்துட்டு இருந்ததுனு நினைக்கிறேன். கீழே ரயில் பாதை இருக்கும் படம் பழநி மலை மேல் செல்லும் ரயில் ஏறும் இடம். நாங்க போனப்போ விஞ்ச் இல்லை. ஆகவே மலைக்கு மேலே ஏற்றிச் செல்லும் இந்த ரயிலில் தான் செல்ல முடிந்தது. நடந்து போகத் தான் ஆசை. ஆனால் இரவுக்குள் எங்க அப்பாவின் ஊரான மேல்மங்கலம் போய்ச் சேரணும். ஆகையால் ரயிலில் சீக்கிரம் போகலாமேனு சிறப்புக் கட்டணத்துக்குப் பயணச் சீட்டு எடுத்தோம். அப்போ ஒரு நபருக்கு 50ரூ சிறப்புக் கட்டணம் ரயிலுக்கு. என்றாலும் ரயில் வருவதற்குப் பல மணி நேரங்கள் காத்துட்டு இருக்க வேண்டி இருக்கு. சிறப்புக் கட்டணம்னு வசூலிக்கிறாங்க. ஆனால் ரயில் பயணம் சிறப்பும் சரி, சாமானியக் கட்டணமும் சரி சேர்ந்து தான் பயணம் போக வேண்டி இருக்கு. சும்மா ஒரு பண வசூல் அரசாங்கத்துக்கு. கோயில்கள் அரசின் பிடியில் இருந்து விடுபட்டால் ஒழிய இதற்கு விமோசனம் இல்லை!
அதே நாள் நாங்கள் மேலே செல்லும்போது (2007 டிசம்பரில்) பழநியில் எடுத்தது இந்தப் படம். மலை மேல் செல்லும் ரயிலில் உட்கார்ந்து செல்லும்போது எதிர்த் திசையில் வந்து கொண்டிருந்த ரயில் இது. மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் பழநியிலே தான் சேருதுனு சொல்லுவாங்க இல்லையா? அந்த இயற்கை அற்புதம் போதாதுனு மனிதனால் உருவாக்கப் பட்ட இந்த ரயில் பாதையும், அதில் செல்லும் இந்த ரயிலும், பார்க்கப் பரவசம்! படம் எடுக்கக் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டித் தான் இருக்கு. கதவுகளை நன்றாய் மூடிடறாங்க. ஜன்னல் வழியே தெரியும் காட்சிதான் எடுக்க முடியும். அந்த மலை ரயில் போகும்போது வெளியே நின்னு எடுக்கிறது ரொம்ப ஆபத்தானது. என்றாலும் எடுக்க முடியலையேனு தான் இருக்கு!

Sunday, May 10, 2009

பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்!

ஹூஸ்டனுக்கு அருகே உள்ள கால்வெஸ்டனின் பறவைகள் பூங்காவில் எடுத்த படம் இது. வித விதமான பறவைகள். வித விதமான நிறங்களிலே. நிறங்களின் வண்ணக்கலவை படைத்தவனின் ரசனையைச் சுட்டுகின்றது. என்ன ஆச்சரியம், சிவப்பு நிறப் பெயிண்டால் கூட இவ்வளவு சிவப்பைக் கொண்டுவர முடியாது. கழுத்துக் கிட்டேயும், கால்களிலேயும் பாருங்க, இளஞ்சிவப்பு நிறம், அங்கே என்னமோ தண்ணீரை விட்டுத் துடைச்சு எடுத்தாப்போல நிறம் கொஞ்சம் மங்கிக் காண்கின்றோம். அதுவும் அந்த நிறச் சேர்க்கையில் செய்திருக்கும் அற்புதங்களைக் காணக் கண் போதாது. மீன்களின் நிறச் சேர்க்கை அதிசயிக்க வைத்தது. படங்களைக் காணோம். ஒளிஞ்சுட்டிருக்கு போல. இது தான் எனக்குப் புரியறதில்லை. பிறப்பின் ரகசியத்தைப் போல். நான் தேடறச்சே படமே சரியாக் கிடைக்கிறதில்லை.
ஆனால் என்னைத் தவிர வேறே யாருமே கணினி பக்கம் வரதும் இல்லை. அப்புறமா எங்கே போகும் படங்கள் எல்லாம்? சிருஷ்டியின் ரகசியம் கூடப் புரிஞ்சுடும் போலிருக்கு. இந்த நீலக் கிளிகளின் நீலத்தைப் பார்த்தால் கண்ணன் நீல நிறமாய் ஒளிர்ந்தான் என்பதையும் தாராளமாய் நம்ப முடியுது இல்லையா?? ஒண்ணோட ஒண்ணு கொஞ்சிக்கிட்ட இதுங்க படம் எடுக்கிறப்போ வெட்கம் இல்லாமல் போஸ் கொடுத்துடுச்சு. இவை பெலிகான் வகைனு சொல்றாங்க. தெரியலை. யு.எஸ்.ஸில் இந்த வசந்த காலத்தில் மட்டுமே வீட்டுத் தோட்டங்களிலும், மற்றப் பூங்காக்களிலும் பறவைகளைக் காண முடியும். மற்ற சமயங்கள் இவை எல்லாமே வெளிநாடுகளுக்கு விருந்தாளிகளாய்ப் போயிடும். இந்தப் பறவைகளுக்குனு செயற்கை நீரூற்றுக்களை உண்டாக்கி அதனோட சூழ்நிலையை மாற்றாமல் அப்படியே அது பழகும்படியாய் வசதி செய்திருக்காங்க. இன்னும் இருக்கு படங்கள், ஆனால் எங்கே போச்சு???? தேடணும்! :(