Wednesday, July 29, 2009

சிதம்பரத்தில் தீக்ஷிதர் வழிபடும் நடராஜர்!

சிதம்பரத்திற்குப் போன மாசம் போனப்போ தீக்ஷிதர் வீட்டில் அவர் தினமும் வழிபடும் நடராஜரை அவர் அனுமதியோடு எடுத்த படம் இது. கொஞ்சம் யோசனையாவும், தயக்கமாவுமே இருந்தது எடுக்கலாமா, வேண்டாமானு. அப்புறமா கொஞ்சம் நிதானப் படுத்திட்டு எடுத்துட்டேன். கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்கோ??? தெரியலை!

Sunday, July 12, 2009

நந்தி மறைக்குது!

எவ்வளவு பெரிய நந்தி??? நல்லா எடுத்திருக்கேனா?? அப்புறம் தன்னோட போஸ் சரியாவே வரலைனு நந்தி சொல்லும்! படம் எடுக்கிறதுக்குனு படிச்சுட்டு எடுக்கணும்! உள்ளே பிரகதீஸ்வரரை எடுக்க முடியாது, இப்போ. ஒரு இருபத்தைந்து வருஷம் முன்னாலே இந்தக் கோயிலில் உள்ளெ போய்ப் பார்த்துட்டு வரதுக்கே பயம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆ இருக்கும். இப்போ என்னன்னா, ஒரே கூட்டம்! கூட்டம்!
தஞ்சாவூர்க் கோயிலில் உள்ளே நுழையும் முன்னர் உள்ள நந்தி மண்டபத்தின் முகப்பு இது. கிட்ட வைச்சு எடுத்தும், சரியா விழலை.