Saturday, March 5, 2011

காவேரி ஓரம், கதை சொன்ன காலம்!

இது காவேரியின் ஒரு கிளை நதி. தஞ்சை, கும்பகோணம் பக்கம் கிளை நதிகளையும் காவேரி என்றே சொல்லுவாங்க. அப்படிப் பார்த்தால் இதுவும் காவேரி தான். பாலத்தைக் கடந்து வண்டியிலே போகும்போது எடுத்தது. பாலத்தின் மரக் கைப்பிடியும் சேர்ந்து வந்திருக்கு. காமிராவை மேலே மட்டும் தெரியும்படி வைத்து எடுக்க முடியலை. க்ராப், மொட்டை எதுவும் வேண்டாம்னு விட்டுட்டேன். (க்ர்ர்ர்ர்ர்ர்ர், முயற்சி பண்ணியும் வரலை! அது என்னமோ பிடிவாதமா போகலை! அதை எடுத்தால் தண்ணீர் கொஞ்சம் போலத் தான் தெரியுது. சரி, தொலைனு விட்டுட்டேன்.

ம்ஹும், மறுபடியும் பார்த்துட்டேன். க்ராப்பிங்கிலே கரை ஓரத்துச் செடிகள், மரங்களை மட்டும் எடுத்துக்கச் சொல்லுது. நமக்கு முக்கியம் தண்ணீரோடு ஓடும் நதி ஆச்சே? மறுபடியும் முயன்று பார்த்துட்டுத் திரும்பப் போடறேன். சொல்ல மறந்துட்டேனே, இந்தக் காவேரி ஓரம், நிறையக் கதை இருக்கு சொல்ல.நகாசு வேலை செய்தாச்சு. என்ன இருந்தாலும் நகாசு இல்லாமல் இருக்கிற அழகு வராதுனு தோணுது! :(

3 comments:

  1. அழகான காட்சியைப் படமாக்கியுள்ளீர்கள்.

    எதற்கும் இருக்கட்டுமென என் நகாசு வந்து கொண்டே இருக்கிறது மின்னஞ்சலில்:))!

    ReplyDelete
  2. வந்தது ரா.ல. நேற்றுத் தான் பார்த்தேன். பதில் போடறதுக்குள்ளே ஆற்காட். இன்னிக்கும் ஆறுமணி நேரம் ஆற்காட்! :(((((

    உங்க வேலையே தனி, நான் அமெச்சூர் தான் இன்னமும்! :))))) நல்லா இருக்கு.

    ReplyDelete
  3. எங்க ஊருக்கு வாங்க

    Dam நிறையா காவிரியை பார்க்கலாம் !

    ReplyDelete