Thursday, April 28, 2011

தீமிதிக் குண்டம்!

 
Posted by Picasa
சென்ற வாரம் ஊருக்குப் போனப்போ மாரியம்மன் கோயிலில் தீமிதிக்கான அக்னிக் குண்டத்தை எழுப்பிக்கொண்டிருக்கும் ஊழியர்கள். அம்மன் புறப்பாடு ஆகி ஊர்வலம் வந்து பின்னர் கோயிலுக்கு எதிரே இருக்கும் வயல்வெளியில் ஒரு இடத்தில் பள்ளம் தோண்டி அதிலே நெருப்பைக் காலையிலேயே மூட்டி விடுகின்றனர். மேலேமேலே கட்டைகள் போடப்பட்டு வைக்கோலால் மூட்டம் மாதிரிப் போட்டு வைக்கின்றனர்.

இந்தத் தீமிதிக்கெனப் பிரார்த்தனை செய்து கொண்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஒரு மாதம் முன்னாலிருந்து விரதம் இருப்பார்கள். ஒருவேளை உணவு மட்டுமே உட்கொள்ளுவார்கள். ஒரு சிலர் கோயிலிலேயே தங்குவதும் உண்டு. தலையில் கரகம் வைத்துக்கொண்டோ அல்லது காவடி எடுத்தவண்ணமோ இறங்குவதாய் வேண்டிக்கொள்வதும் உண்டு. இங்கே காவடியின் ஒரு வகையைப் பார்க்கலாம். 
Posted by Picasa
இங்கே இன்னொருத்தர் அலகு குத்திக்கொண்டு காவடி எடுத்து வருகிறார்.  
Posted by Picasa
முதலில் குண்டம் இறங்குவதற்கு உரிமை உள்ளவர் அந்த அந்தக் கோயிலின் பூசாரிகளே ஆவார்கள். ஒரு சில கோயில்களில் ஊர்ப் பெரியவர்கள் இறங்கலாம். என்றாலும் பூசாரியே முதலில் இறங்குகிறார். அக்னியில் இறங்கியதும், காலை உடனே தரையில் மண்ணிலோ, வைக்கக் கூடாது என்பதால், 
Posted by Picasa
ஒரு பெரிய அண்டா நிறையப் பாலை வாங்கி, அதைத் தீமிதிக்குண்டத்தின் அருகே ஒரு பள்ளம் தோண்டி அதில் ஊற்றிவிடுகின்றனர். தீமிதிப்பவர்கள் அந்தப் பாலில் காலை நனைத்துக்கொண்டு பின்னரே மேலே ஏறுகின்றனர். இதோ இங்கே பள்ளத்தில் ஊற்றப்பட்ட பால்.  
Posted by Picasa

Wednesday, April 27, 2011

ஆனை, ஆனை, அழகர் ஆனை!

 
Posted by Picasa
ஆனைக்குட்டிக்கு மூணு வயசாம். ரொம்பவே விஷமம் பண்ணுது. சும்மாவே இருக்கிறதில்லை. தலையைத் தலையை ஆட்டிண்டு அதுபடுத்தற பாடு! பார்க்கப்பார்க்க அழகு!

Thursday, April 14, 2011

ஆஹா, போளி, ஆஹா வடை!

 அடுப்பில் போளி வெந்து கொண்டிருக்கிறது.

 
Posted by Picasa
அடுத்த போளி அடுப்புக்குப் போகத் தயாராக!


 போளி பண்ணி வைச்சாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச், சாப்பிட வரலாம். யாரு வரீங்க?


 
Posted by Picasa
ஆமை(?) வடை! ஹாஹாஹா, நாம வடை தட்டினா நிச்சயமா ஆமை ஓடு போல கெட்டியா இருக்காது. நல்லா முறு முறுனு கடிக்கத் தோதா இருக்கும். வரலாம் வாங்க! என்ன?? நிறத்தைப் பார்த்து பயமா?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதெல்லாம் ஒண்ணும் காரம் இல்லை. து.பருப்புப் போட்டால் அடை, வடை , தோசை எதுவானாலும் நிறமும், கரகரப்பும் கொடுக்கும். இது சமையல் ரகசியம்ங்க. சொல்லிட்டேன், ரகசியமா வச்சுக்குங்க, ப்ளீஈஈஈஈஈஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்